1688. | ‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்; ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்; “போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” |
(மகன் இறந்தான் என்பது கேட்ட அவ் இரு முதுகுரவரும்) ‘வீழ்ந்தார் அயர்ந்தார்புரண்டார் - தரையில் விழுந்து சோர்வு அடைந்து புரண்டார்கள்; ‘இன்று விழிபோயிற்று’ என்றார் - இன்றைக்கு எங்கள் கண்கள் போயின என்றார்; துன்பக் கடலுள்ஆழ்ந்தார் - துன்பம் எனும் பெருங்கடலுள் மூழ்கினர்; ‘ஐயா! ஐயா’ என்றார் -(மகனை நினைத்து) ஐயனே ஐயனே என்றார்; ‘நெஞ்சைப் போழ்ந்தாய்’ என்றார் -(எங்கள்) மனத்தைப் பிளந்துவிட்டாய் என்றார்; ‘நீ பொன்நாடு அதனில் போய் வாழ்ந்தே இருப்பத் தரியேம்’ - நீ பொன்னுலகம் சென்று அங்கு வாழ்ந்து இருப்ப நாங்கள்தனித்திருக்க மாட்டேம்; இனியே வந்தேம், வந்தேம் - இப்பொழுதே வந்துவிட்டோம், வந்து விட்டோம் (என்ற புலம்பினர்.) இறந்த மகனின் பெற்றோர்கள் புலம்பினர். இனி ஒரு செயலும் செய்ய இயலாதவர்களாகஆனோம் என்பது கருத்து. 83 |