1699. | மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தி, தம் கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப, பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் - ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார். |
மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும் மங்கலமும் சிந்தி - அரிய அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ; தம் கோதை புடை பெயர - தம்முடைய கூந்தல்பக்கத்தில் குலைந்து விழ; கூற்று அனைய கண் சிவப்ப - யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர் சிவக்க; ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்; ஒசி - ஒடிந்து வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் - பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப் பார் சேர்ந்தார் - துடித்துப் பூமியில் விழுந்தார்கள். ‘பூங்கொடி’ இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே ‘ஊதை எறிய’ என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில் வீழும் பெண்களுக்கு உவமை ஆயிற்று. 94 |