1707. ‘ஆளான் பரதன் அரசு’
     என்பார்; ‘ஐயன், இனி
மீளான்; நமக்கு விதி
     கொடிதேகாண்’ என்பார்;
‘கோள் ஆகி வந்தவா,
     கொற்ற முடிதான்’ என்பார்;
‘மாளாத நம்மின் மனம்
     வலியார் ஆர்?’ என்பார்.

     ‘பரதன்அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை  ஏற்கமாட்டான்;’
என்பார் - ; ‘ ஐயன் இனி மீளான் - இராமன்இனிமேல் நாடு திரும்ப
மாட்டான்;  நமக்கு விதி கொடிதே காண்’- நமக்கு ஊழ் வினை மிகவும்
கொடுமையானது;’  என்பார் - ; ‘ கொற்ற முடிதான்- வெற்றியுடைய
மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ - தீய இடையூறாகிவந்து  சேர்ந்தபடி
என்னே;’ என்பார் - ;  மாளாத  நம்மின் மனம் வலியார்ஆர்?’ -
(இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக்
காட்டிலும் உலகில் கொடுமனம்
உடையவர்கள்யார் உளர்;’  என்பார் -.

     முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும்
துயர்நிலை இராமனுக்கு வந்திராதேஎன்னும் ஆதங்கத்தால் முடியே
இடையூறாகித் தீங்கு செய்தது  என்பாராயினர்.