1708.‘ஆதி அரசன், அருங்
     கேகயன் மகள்மேல்
காதல் முதிர, கருத்து
     அழிந்தான் ஆம்’ என்பார்;
‘சீதை மணவாளன்
     தன்னோடும் தீக் கானம்
போதும்; அது அன்றேல்,
     புகுதும் எரி’ என்பார்.

    ‘ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன்
மகள்மேல்
-அரிய கைகேயிமாட்டு; காதல்முதிர - அன்பு முற்றுதலால்;
கருத்து  அழிந்தான் ஆம்- மனம் மயங்கிஅறிவு
தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும்
தீக்கானம் போதும்
- (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய
காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் -அது முடியாமற் போகுமானால்;
எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து  உயிர்விடுவோம்;’ என்பார் - .

     ஆதி அரசன் - தசரதன்,  பிரதான மன்னன் என்பதாம். “ஆதி
மன்னனை ஆற்றுமின்நீர்” என்று (1837.) வருதல் காண்க.            103