1714. | ‘ கோதை வரி வில் குமரற் கொடுத்த நில மாதை ஒருவர் புணர்வாராம்? வஞ்சித்த பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே, சீதை பிரியினும் தீராத் திரு?’ என்பார். |
‘கோதை வரிவி்ல் குமரன் கொடுத்த நிலமாதை - வெற்றி மாலை சூடிய கட்டமைந்தகோதண்டத்தை உடைய இராமனுக்குப் பேரவையில் கொடுக்கப் பெற்ற நிலமகளை; ஒருவர்புணர்வார்- வேறு ஒருவர் (பரதன்) கூடுவார்; (அப்படிக் கூடினால்); சீதை பிரியினும் -சீதாபிராட்டி காடு சென்றாலும்; தீராத் திரு - தானும் காடு செல்லாமல்தங்கிவிட்ட செல்வமகள்; வஞ்சித்த பேதை - வஞ்சனை செய்த கைகேயியின்; சிறுவனை- மகனாகிய பரதனை; பார்த்துப் பின் நிற்குமே?’ - பார்த்துக்கொண்டுஏற்றுக்கொண்டு நிற்பாளா;’ என்பார்-. ‘ஆம்’ உரையசை. ‘சீதை பிரியினும் தீராத் திரு’ என்பது சீதை இந்நகரத்தை விட்டுப்பிரிந்த அளவில் செல்வ மகளும் இந்நகரை விட்டுப் போய்விடுவாள் என்பது குறித்தது. 109 |