கைகேயிமேல் சினந்து இலக்குவன் போர்க்கோலம் மேற்கொளல் 1718. | ‘சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின் வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே! நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!’ என்னா, கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். |
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை - சிங்கக் குட்டிக்குக் கொடுத்தற்குரிய இனிய சுவையுடைய மாமிசத்தை; வெங்கண்நாயின் சிறு குட்டனை - கொடிய கண்ணை உடைய நாயின் சிறு குட்டிக்கு; ஊட்ட விரும்பினாளே! -உண்பிக்க ஆசைப்பட்டாளே; நங்கைக்கு - கைகேயிக்கு; அறிவின் திறம் நன்று இது!நன்று இது’ - புத்தி வன்மையாகிய இது நன்றாயிருந்தது;’ என்னா - எனச் சொல்லி; கங்கைக்கு இறைவன் - இலக்குவன்; கடகக் கை - கடகம் அணிந்ததன்னுடைய கையை; புடைத்து - தட்டி; நக்கான் - சிரித்தான். பொருத்தம் அற்றசெயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு கூறினான். சிறுகுட்டனை -குட்டனுக்கு உருபுமயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ‘நன்று இது’ இகழ்ச்சிக்குறிப்பு - கங்கைவரை உள்ள நாடு கோசலம் ஆதலின் இலக்குவன் ‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான். இனி சரயு நதிக்கு ‘இராமகங்கை’ எனும் பெயருண்மையின்அதுபற்றிக் ‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான் என்பது ஏற்குமேல் கொள்க. 113 |