2489.‘வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
“தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே?

     ‘வையகம் - உலகம்;  வாய்மை என்னும் ஈது அன்றி - சத்தியம்
என்கிற இதுவொன்றில்லாமல்;  “தூய்மை என்றும் ஒன்று  உண்மை
சொல்லுமோ?
- “தூய்மை என்கின்றஒன்று தனியே இருப்பதாகச்
சொல்லுமா?; தீமைதான்- தீய குணம் என்பது; அதின்தீர்தல் அன்றியே-
அந்தச் சத்தியத்தை விட்டு நீங்குதல்தானே அல்லாமல்; ஆய் -
ஆராய்கின்ற;  மெய ஆக - உண்மையாக;  வேறு அறையல் ஆவதே -
சத்தியமன்றிவேறு  ஒன்றைச் சொல்ல இயலுமா ? (இயலாது என்றபடி.)

     ‘வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை;
தீமை என்பது வாய்மையின் தவறுவதே அன்றி வேறன்று; சத்தியத்துக்கு
இணையாக, மாற்றாக வேறொன்றைச் சொல்ல இயலாது. ஆகவே, தந்தையார்
உரையை, சத்தியத்தைக் காப்பதுதான் என்க தூய்மையாகும். வேறு இல்லை’
என்றான் இராமன். ‘புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்’ (குறள்.298) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
                                                            115