1722. | ‘புவிப் பாவை பரம் கெட, போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும், அவித்து அவர் ஆக்கையை அண்டம் முற்றக் குவிப்பானும், எனக்கு ஒரு கோவினைக் கொற்ற மௌலி கவிப்பானும், நின்றேன்; இது காக்குநர் காமின்’ என்றான். |
‘புவிப்பாவை பரம் கெட - உலகம் என்னும் மகள்தன் சுமை நீங்க; போரில்வந்தோரை எல்லாம் - என்னோடு போர்க்கண் வந்தவர்களைஎல்லாம்; அவிப்பானும் - அழிப்பதற்காகவும்; அவித்து- அழித்து; அவர் ஆக்கையை- அவர்களின் உடல்களை; அண்டம் முற்றக் குவிப்பானும்- உலகஅண்டமெல்லாம்நிறையக் குவிப்பதற்காகவும்; எனக்கு ஒரு கோவினை - எனக்கு ஒப்பற்றதலைவனாகஉள்ள இராமனுக்கு; கொற்ற மௌலி - வெற்றி பொருந்தியமகுடத்தை; கவிப்பானும் - சூட்டுதற்காகவும்; நின்றேன்- (இப்போது ஆயத்தமாக) நிற்கின்றேன்; இது காக்குநர் காமின்’ -இதைத் தடுத்துக் காத்துக்கொள்ளக் கூடியவர்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்;’ என்றான். இது கைகேயியையும் அவளைச் சார்ந்தோரையும் நோக்கிக் கூறியதாகக் கொள்க. ‘காக்குநர்- படர்க்கை. காமின் - முன்னிலை இட வழுவமைதி. 117 |