இலக்குவன் பிடிவாதம் 1737. | ‘நல் தாதையும் நீ; தனி நாயகம் நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக் கற்றாய்! இது காணுதி இன்று’ என, கைம்மறித்தான் - முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். |
முற்றா மதியம் மிலைந்தான் - இளம்பிறை அணிந்த சிவபெருமான்; முனிந்தானை- சினங் கொண்ட நிலையடைந்தானை; அன்னான் - ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனைநோக்கி); ‘நல்தாதையும் நீ - (எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ- ஒப்பற்ற தலைவனும் நீ; வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே - (என்னைப் )பெற்றெடுத்த தாயும் பிறர் யாரும் இல்லை நீயே; பிறர்க்கு நல்கக் கற்றாய் - (எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து விடக் கற்றவனே; இன்று இது காணுதி -இன்று (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய) இதனைப் பார்ப்பாயாக;’ என -என்று சொல்லி; கைம் மறித்தான் - (இராமனைத் ) தடுத்தான். எனக்குத் தந்தையும்தாயும் நீயே, தயரதனும் கைகேயியும் அல்லர்; ஆகையால் உனக்குத்தீமை செய்த அவர்களைத் தண்டிப்பது வேதம் கற்றறிந்தமைக்கு முரணாகாது என்றான் இலக்குவன். இது என்பது ‘எனது வில் தொழில்’ என்றுஅவன் கூறியதாகக் கொள்ளினும் அமையும். 132 |