இராமன் மறுத்து உரைத்தல் 1738. | வரதன் பகர்வான்; ‘வரம் பெற்றவள்தான் இவ் வையம் சரதம் உடையாள்; அவள், என் தனித் தாதை, செப்பப் பரதன் பெறுவான்; இனி, யான் படைக்கின்ற செல்வம் விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது?” என்றான். |
வரதன் - இராமன்; பகர்வான் - கூறுவான்; ‘வரம் பெற்றவள் தான்- (அரசனுக்குச் சாரதியாய் இருந்து ) வரம் வாங்கிக் கொண்டவளாகிய கைகேயியை; இவ்வையம் சரதம் உடையாள் - இவ் வுலக ஆட்சியை மெய்யாகப் பெறுதற்கு உரிமை உடையவளாவாள்; அவள், என் தனித் தாதை செப்பப் பரதன் பெறுவான் - அவளும், என்ஒப்பற்ற தந்தையாகிய தயரதனும் சொல்லப் பரதன் (இவ்வரசாட்சியைப் ) பெறுவான்; இனி- அடுத்து; யான் படைக்கின்ற செல்வம் - நான் பெறுகின்ற செல்வம்; விரதம் - தவம் ஆகும்; இதின் நல்லது - இத்தவத்தினும் நன்மையானது; இனி வேறு யாவது?- இனி வேறு என்ன உள்ளது;’ என்றான் -. நான் இதனை நல்லது என்றும், இதற்கு மேலாக, நன்மை வேறில்லை என்றும்எண்ணுகிறபோது, என்னையே தாயும் தந்தையும் ஆகக் கருதும் நீ என்னுடைய நன்மையைக் கெடுக்கமுயற்சிக்கலாமா? என்பது குறிப்பு. 133 |