இராமன் சுமித்திரை துயரை ஆற்றுதல்   | 1744. | கண்டாள்,  மகனும் மகனும்      தன கண்கள் போல்வார்,  தண்டாவனம் செல்வதற்கே      சமைந்தார்கள் தம்மை;  புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப்      படிமேல் புரண்டாள்;  உண்டாய துன்பக் கடற்கு      எல்லை உணர்ந்திலாதாள். |  
      (சுமித்திரை) தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் -  தடைபடாத காட்டுக்குச்செல்வதற்கு  உறுதி  செய்தவர்களாகிய;  மகனும்  மகனும் - இராமனும் இலக்குவனும்;  ஆகிய தன கண்கள் போல்வார்  தம்மை - தன் இரண்டு கண்களையும்  போன்றவர்களை;  கண்டாள் -  பார்த்தாள்;  புண்தாங்கு நெஞ்சத்தனளாய் - புண்பட்ட மனம்  உடையவளாய்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்-  தோன்றிய துன்பம்எனும் கடலுக்கு  முடிவு காண மாட்டாது; படிமேல் -  மண்ணின் மேல்;  புரன்டாள் -விழுந்து  புரண்டாள்.      தண்டா வனம் - எனப் பிரிக்காது  ஒன்றாக்கித் தண்டகாரணியம்  என்பதாகவும்உரைக்கலாம். சுமித்திரை இந்நிலையில் குறிப்பிட்டு ஓர்  இடத்தைச் சுட்டுவது  பொருத்தமாய்இராது  என்பதால் தண்டா வனம்  என்பதாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றது.தண்டகாரணியம் என்பது  விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில் உள்ள காடு.      139  |