இராமன் சுமித்திரை துயரை ஆற்றுதல்  

1744.கண்டாள், மகனும் மகனும்
     தன கண்கள் போல்வார்,
தண்டாவனம் செல்வதற்கே
     சமைந்தார்கள் தம்மை;
புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப்
     படிமேல் புரண்டாள்;
உண்டாய துன்பக் கடற்கு
     எல்லை உணர்ந்திலாதாள்.

     (சுமித்திரை) தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் -
தடைபடாத காட்டுக்குச்செல்வதற்கு  உறுதி  செய்தவர்களாகிய;  மகனும்
மகனும்
- இராமனும் இலக்குவனும்;  ஆகிய தன கண்கள் போல்வார்
தம்மை
- தன் இரண்டு கண்களையும்  போன்றவர்களை;  கண்டாள் -
பார்த்தாள்;  புண்தாங்கு நெஞ்சத்தனளாய் - புண்பட்ட மனம்
உடையவளாய்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்-
தோன்றிய துன்பம்எனும் கடலுக்கு  முடிவு காண மாட்டாது; படிமேல் -
மண்ணின் மேல்;  புரன்டாள் -விழுந்து  புரண்டாள்.

     தண்டா வனம் - எனப் பிரிக்காது  ஒன்றாக்கித் தண்டகாரணியம்
என்பதாகவும்உரைக்கலாம். சுமித்திரை இந்நிலையில் குறிப்பிட்டு ஓர்
இடத்தைச் சுட்டுவது  பொருத்தமாய்இராது  என்பதால் தண்டா வனம்
என்பதாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றது.தண்டகாரணியம் என்பது
விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில் உள்ள காடு.      139