1748.கார் வானம் ஒப்பான்தனைக்
     காண்தொறும் காண்தொறும் போய்
நீர் ஆய் உக, கண்ணினும்
     நெஞ்சு அழிகின்ற நீரார்,
‘பேரா இடர்ப்பட்டு அயலார்
     உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர,
     ‘வந்தன சீரம்’ என்றார்.

     கார் வானம் ஒப்பான்தனை - மழை மேகத்தை ஒத்த கருமையும்
தண்மையும் உடையஇராமனை; காண்தொறும் காண்தொறும் - பார்க்கப்
பார்க்க; கண்ணினும் போய் - பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்;
நீர் ஆய் உக - நீராகிச் சிந்த;  நெஞ்சு அழிகின்ற  நீரார் - மனம்
கெட்டு  வருந்துகின்ற  தன்மையுடைய ஏவல் மகளிர்(இராமனைப் பார்த்து)
‘பேரா இடர்ப்பட்டு - நீங்க முடியாத துன்பப் பட்டு;  அயலார்  உறு
பீழை கண்டும்
- அயலார்கள்  படுகின்ற துன்பத்தைக்  கண்டு வைத்தும்;
தீரா மன்த்தாள் - தன் கொள்கையிலிருந்து  நீங்காத மனம் உடைய
கைகேயி;  தர -கொடுத்தனுப்ப;  வந்தன சீரம் - வந்தனவாகிய  மரவுரி 
இவை;  என்றார் -

     நேரில்  இராமனைக் காணும்போது  மேலும் நெஞ்சு புண்ணாகிறது
அச்சேடியர்களுக்கு. சேடியரது உள்ளத் துயர் இப்பாடலில்ல தெள்ளத்
தெளிவு ஆகும்.                                             143