இலக்குவன் மரவுரியை ஏற்றுத் தாயைப் பணிதல் 1749. | வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி, ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும் காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும் ’ என்றான். |
வாள் நித்தில வெண் நகையார் தர- ஒளியுடைய முத்துப் போலும் வெள்ளிய பற்களை உடையாராய ஏவல் மகளிர் கொடுக்க; வள்ளல்- இராமன் தம்பியாயஇலக்குவன்; ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர்- புதிய வருவாய்களைச் சிறந்த கோசல நாட்டை இழக்கும்படிசெய்த கைகேயி; ஈந்த எல்லாம் - கொடுத்த எல்லாப்பொருளையும்; பூணப் பிறந்தானும் நின்றான் - அணிந்து கொள்ளப் பிறந்தவனாகிய என் தமயனும்இருக்கின்றான்; அவை- அந்தக் காட்சிகளை;போர் விலோடும் - போரில்ஆற்றல் காட்டும் வில்லைச் சுமந்து கொண்டே; காணப் பிறந்தேனும் நின்றேன் -காண்பதற்குப் பிறந்த நானும் இருக்கின்றேனே; அவை காட்டும்’ - அவற்றைக்காண்பியுங்கள்;‘என்றான் - நாடு இழப்பித்த கைகேயியை ஒன்றும் செய்ய இயலாத எனக்குப் ‘போர் வில்’ எதற்காகஎன்ற தன்னிரக்கமாகக் கூறியது ‘போர்விலோடும்’ என்ற தொடர். 144 |