1759. | ‘ “மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய்” என ஏறின வெகுளியை, யாதும் முற்றுற ஆறினை, தவிர்க்க’ என, ‘ஐய! ஆணையின் கூறிய மொழியினும் கொடியது ஆம்’ என்றான். |
‘ஐய! - இராமனே; ‘நீ வனம் கொள்வாய்’ என- நீ காடு செல்வாய் என்பது கேட்டு; ஏறின வெகுளியை - எனக்கு மேல் மிகுந்த சினத்தை; “யாதும் முற்றுற - சிறிதும் இல்லாதபடி போக; ஆறினை, தவிர்க்க’ - அடங்கிநீங்குக;” என - என்று; ஆணையின் - கட்டளையாக; கூறிய மொழியினும் - (நீ) முன்பு கூறிய சொல்லைக் காட்டிலும்; கொடியது ஆம்- (இப்போது கூறியஇச்சொல்) கொடுமை உடையது ஆகும்; இனி மாறு என்னை?- இனி இச்சொல்லுக்கு ஒப்பாகச்சொல்லத்தக்கது வேறு என்ன உள்ள;’ என்றான் - ‘சினம் தவிர்க’ என்று சொன்னதைவிட, ‘அயோத்தியில் தங்குக’ என்ற சொல் மிகக்கொடிது என்றான் இலக்குவன். 154 |