இராமன் உளம் நெகிழ்தல் 1761. | உரைத்தபின், இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்; வரைத் தடந் தோளினான் வதனம் நோக்கினான்; விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர் நிரைத்து இடை இடை விழ, நெடிது நிற்கின்றான். |
உரைத்தபின் - (இவ்வாறு இலக்குவன்) உரைத்த பிறகு; இராமன்-; ஒன்று உரைக்க நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல முடியடாதவனாகி; வரைத் தடந்தோளினான் வதனம் - மலை போன்ற அகன்ற தோள்களை உடைய இலக்குவனது முகத்தை நோக்கினான் - பார்த்து; விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர் - வரும்நீரானது; நிரைந்து இடை இடை விழ - ஒழுங்காய் இடை இடையே விழும்படி; நெடிது -நீண்ட நேரம்; நிற்கின்றான் - நிற்பவன் ஆனான். மறு மாற்றம் சொல்ல இயலாது இராமன் உடன்பட்டபடி. இலக்குவன் முகம் பார்த்த அளவில்மனம் உருகிக் கண்ணீர் சொரியலானான் இராமன். இலக்குவன் பரிவும் உரமும் இராமனைஅசையாநிலைக்கு ஆளாக்கின. 156 |