வசிட்டன் வருதலும் சிந்தித்தலும் 1762. | அவ்வயின், அரசவை நின்றும் அன்பினன் எவ்வம் இல் இருந் தவ முனிவன் எய்தினான்; செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்; கவ்வை அம் பெருங் கடல், முனியும் கால் வைத்தான். |
எவ்வம் இல் அருந்தவ முனிவன் - துன்பமற்ற அரிய தவத்தைச் செய்த முனிவனாயவசிட்டன்; அரசவை நின்றும் - அரச சபை மண்டபத்திலிருந்தும்; அன்பினன் -இராமனிடத்து அன்பை உடையனாய்; அவ்வயின் - அச் சுமித்திரை மாளிகையின்கண்; எய்தினன் - அடைந்தான்; செவ்விய குமரரும் - நேரிய மைந்தர்களாய இராமலக்குவர்களும்; சென்னி தாழ்ந்தனர் - தலையால் வணங்கினார்கள்; முனியும் - வசிட்டனும்; கவ்வை அம் பெருங்கடல் - துன்பம் என்னும் பெரிய கடலில்; கால்வைத்தான் - இறங்கத் தொடங்கினான். துன்பம் ஏதும் எய்தாது அருந்தவம் முடித்தவன் அன்பினால் இப்போது துன்பக் கடலில்கால்வைத்தான் என்றது ஒரு நயம். ‘அன்னமும் துயர்க்கடல் அடி வைத்தாள் அரோ’ (2461.) என்றுபின்வருவதும் காண்க. 157 |