1763.அன்னவர் முகத்தி னோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான்.

     உணரும்  தன்மையான் - எல்லாவற்றையும்  உணரும்  மகா
ஞானியாகிய வசிட்டன்; அன்னவர் - இராமலக்குவர்களின்; முகத்தினோடு
அகத்தை நோக்கினான்
-முகத்தையும் மனத்தையும் கண்ணாலும்
நெஞ்சத்தாலும் நோக்கினான்;  பொன் அரைச் சீரையின்பொலிவு
நோக்கினான்
- அழகிய இடையின்கண் அணிந்துள்ள மரவுரியின்
பொலிவையும்பார்த்தான். எடுத்த துன்பத்தால் - மேல் ஏறிய துயரத்தால்;
தன்னையும் உணர்ந்திலன் - தன்னையும் மறந்தான்; இனி உணர்த்துவது
என்?
- இனி அவன்துன்பத்தைப்பற்றி சொல்வது எவ்வாறு?

     கண்ணால் நோக்குதல்,  மனத்தால் நோக்குதல் என்ற நோக்கம்
இருவகையாதலின், முகமும்அகமும் நோக்கினான் என்றார்.  இவர்கள்
அணிந்த  படியால் சீரை பொலிவு பெற்றது என்பார்‘சீரையின் பொலிவு’
என்றார்.  இதுவும்  ஒரு நயம்.                                  158