1765. | ‘வெவ் வினையவள் தர விளைந்ததேயும் அன்று; இவ் வினை இவன்வயின் எய்தற்பாற்றும் அன்று; எவ் வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ? செவ்விதின், ஒருமுறை தெரியும் பின்’ என்றான். |
இவ்வினை - இச்சீரை சுற்றிக் காடுபோதலாகிய செயல்; வெவ்வினையவள் தரவிளைந்ததேயும் அன்று - கொடு வினை படைத்த கைகேயி கொடுக்க அவளால் உண்டாகியதும்அன்று; இவன் வயின் எய்தற்பாற்றும் அன்று - வேறொரு வகையால் சத்துவகுண வடிவனாகிய இவன்பால் வரக்கடவதும் அன்று; எவ்வினை நிகழ்ந்ததோ? - எந்தச் செயலால் இப்படிநடைபெற்றதோ?; ஏவர் எண்ணமோ? - யாருடைய மனக்கருத்தால் நடந்ததோ; பின்ஒருமுறை - பிற்காலத்தில் ஒரு படியாக; செவ்விதின் தெரியும்’ - நன்குவிளங்கும்; என்றான் - என மனத்துள் சொல்லிக்கொண்டான். மெய்யுணர் ஞானியாகிய வசிட்டன் முன்பு ‘ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என இதயத்து எண்ணி’(208.) யவன் ஆதலின், இந்நிகழ்ச்சியின் வித்து அவனுக்குத் தெரியும். ஆயினும், அதுஅப்போது அவனுக்குத் தெரிந்தது; இப்போது மாயையால் ஒன்றும் அறிகிலன் ஆயினன்; அறிவானாயின் இராமனை வேண்டலும், கைகேயியைக் கடிந்துரைத்தலும் முதலியன அவனால்நடைபெறாவாம். அதனாலேயே ‘எவ்வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ’ என இறைமாயையால்முன்னறிந்ததனையே மறந்து அறியாதவன் ஆயினான் என்க. 160 |