மக்கள் துயரம்  

1771. சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்.,
முற்றிய உவகையன், முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ.

     சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்;
தொடரும் தம்பியன் - தன்னைப்  பின்பற்றிவரும் தம்பியோடு;  முற்றிய
உவகையன்
- நிரம்பியமகிழ்ச்சியுடன்;  முளரிப் போதினும் - தாமரை
மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு
செல்கின்ற  இராமனின்;  கொள்கை- மனக் கருத்தை;  கண்டவர் -
அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்ததுன்பத்தை;  ஒருவகை -
ஓரளவுக்கு;  உணர்த்துவாம் - சொல்லுவோம்.

     கான் புகும் இராமனது  முகமலர்ச்சி தாமரை மலரினும்பொலிந்தது
என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாறிற்று. ‘அரோ’
ஈற்றசை.                                                    166