1774. | விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல் எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர்; சிலர் பதைத்து, அளகவல்லியின் கொழுந்து எரி உற்றென, துயரம் கூர்கின்றார். |
சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் - சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர் -முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் - மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென - நுனிதீப்பற்றியது போல; துயரம் கூர்கின்றார் - துன்பம் மிகுகின்றார். அனகம் என்று பாடங்கொண்டு நீர் எனப் பொரு படுமாதலின் தண்ணீரில் உள்ள கொடியின் கொழுந்து தீப்பற்றியது போல என உரைப்பினும்அமையும். 169 |