1776. | நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில; ‘இக் கணம்! இக் கணம்!’ என்னும் தன்மையும் புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர் உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! |
உடல் நெக்கன - (சிலர்) உடல்கள் உடைந்தன; உயிர் நிலையில் நின்றில- உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின; இக்கணம்! இக்கணம்! என்னும்தன்மையும் புக்கன, புறந்தன - இந்தக் கணம் போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய்உயிர்கள் உள்ளே நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் - மலர்க்கண்கள்; நீர்வறந்து- நீர்வற்றி; புண்ணின் - புண்ணைப் போல; உதிர வாரி -இரத்தப் பெருக்கை; உக்கன - சிந்தின. உடல் நெக்குவிட்டு உயிர் இதோ போய்விடும் என்கின்ற நிலையில் உடலினுள் நுழைவதும்போவதுமாய் ஒரு நிலையில் நில்லாமல் இருந்தது என்பதாம். கண்கள் குருதி சிந்தின புண்ணைப்போல், ‘ஏ’ ஈற்றசை. 171 |