1777. | இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர், பெருளகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர். ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்; கரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். |
இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் - இரண்டு கைகளை உடைய யானையை ஒத்த கணக்கற்ற வீரர்கள்; பெருகு ஐயில் - பெரிய கைவாளினால்; தலையைப் பேணலர் - தலையை விரும்பாதவர்களாய்; பெயர்த்தனர் - பேர்த்து எடுத்து; ஒரு கையில் கொண்டனர் - ஒரு கையில் வைத்துக் கொண்டு; உருட்டுகின்றனர் - உருள விடுகின்றார் (வேறுசிலர்); சுரிகையின் -குற்றுடைவாளால்; கண் மலர் ?- மலராகிய கண்ணை; துன்று - குடைந்து; நீக்கினார் - போக்கினார். ஆடல் வீரர்க்கு ‘இரு கையின் கரி’ என உவமை கூறினார். ‘இருகை வேழத்து இராகவன்’ என்பது பாலகாண்டத்தொடர். மகளிர் செயல் கூறியவர், இதனால் ஆடவ வீரர்செயலைக் கூறினார். ஐயில்; அயில்-முதற்போலி. 172 |