1777.இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,
பெருளகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர்.
ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;
கரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார்.

     இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் - இரண்டு கைகளை

உடைய யானையை ஒத்த கணக்கற்ற வீரர்கள்; பெருகு ஐயில் - பெரிய
கைவாளினால்; தலையைப் பேணலர் - தலையை விரும்பாதவர்களாய்;
பெயர்த்தனர் - பேர்த்து எடுத்து;  ஒரு கையில் கொண்டனர் - ஒரு
கையில் வைத்துக் கொண்டு;  உருட்டுகின்றனர் - உருள விடுகின்றார்
(வேறுசிலர்); சுரிகையின் -குற்றுடைவாளால்;  கண் மலர் ?-  மலராகிய
கண்ணை; துன்று - குடைந்து;  நீக்கினார் - போக்கினார்.

     ஆடல் வீரர்க்கு ‘இரு கையின் கரி’ என உவமை கூறினார். ‘இருகை
வேழத்து இராகவன்’ என்பது பாலகாண்டத்தொடர். மகளிர் செயல் கூறியவர்,
இதனால் ஆடவ வீரர்செயலைக் கூறினார். ஐயில்; அயில்-முதற்போலி.  172