1782. ‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே.

     ‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’-  இராமனுக்கு இனித்
தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி;  தம் மகன் வயின் -
தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர்
வாய்களால்
- அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால; அகல்
மதில் நெடு மனை
- அகன்ற மதிலை  உடைய பெரிய அரண்மனை; 
அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்;  பகலிடை - பகற்காலத்தில்;
மலர்ந்தது - மலர்ந்துள்ளதான;  ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப்
போன்று ஆயின.

     வாய்க்கு ஆம்பல்  உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய்
செவ்வாம்பல்  மலர்ந்தாற் போலும்,  பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல
செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை
என்றார். ‘ஏ’ காரம்  ஈற்றசை.                                  177