1783.திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ.,

     கண் கலுழி ஆறு - (அம் மகளிரது) கண்ணீர்ப் பெருக்காகிய
கலங்கிய ஆற்றுவெள்ளம்; திடர் உடைக் குங்குமச் சேறும்,
சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு
-திட்டுத் திட்டாகப் பொருந்திய
(மார்பகத்தில் பூசப்பெற்ற) குங்குமச் சேறும் செஞ்சாந்தமும்ஆகியவற்றை
நடுநடுவே சேற்றுக் குழம்பாகக் கொண்டு; ஆரம் ஈர்த்தன - (அவர்கள்
மார்பில் அணிந்துள்ள) முத்துமாலையை இழத்துக்கொண்டு;  மிடைமுலைக்
குவடு ஒரீஇ
-நெருங்கியுள்ள முலைச் சிகரங்களிலிருந்து  கீழ் இறங்கி;
மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த- மேகலையாகிய அகன்ற
கடலுக்குள் நுழைந்து  பாய்ந்தன.

     கலுழி - கலங்கிய நீர் ஆரம் - ஆற்றை நோக்கின்சந்தனமாம்.
மகளிரை நோக்க முத்தாரமாம். இங்கு முத்துவடம் சிலேடையாக அமைந்தது.
மற்றவைஉருவகம்.                                            178