1784.தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
உண்டு இடர் உற்ற போது என் உறாதன?

    தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த

கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் -
சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர்
போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும்   ஒருபொழுதும் காணாதவன்)
கண்டான்;  விண் தலத்து  உறையும் நல்வேந்தற்கு ஆயினும் -
விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்;  இடர்
உற்றபோது
- துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம்
வராதவை  உண்டு.

     வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா
அவமானமும் வந்து சேரும் என்பது  உலகியல்; அரண்மனையை  விட்டு
வெளியே வராதவர் ஆதலின்இதுகாறும் சூரியனால்  பார்க்கப்படாதது
அவர் முகம் என்றானாம்.                                      179