இராமன் தன் மனையை அடைதல் 1786. | இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி, எங்கணும், திரைப் பெருங் கடல் எனத் தொடர்ந்து பின் செல, உரைப்பதை உணர்கிலன், ஒழிப்பது ஒர்கிலன், வரைப் புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான். |
(அனைவரும் )இரைத்தனர் - அழுதனர்; இரைத்து எழுந்து ஏங்கி - அமுது மெல்ல எழுந்து புலம்பி; எங்கணும்- எவ்விடத்தும்; திரைப்பெருங்கடல் என- அலை வீசுகின்ற பெருங்கடல் (தொடர்வது) போல; தொடர்ந்து பின் செல -(இராமனைப்)பின்பற்றித் தொடர்ந்து செல்ல; வரைப்புயத்து அண்ணல் - மலைபோன்றதோளைஉடைய தலைவனாகிய இராமன்; உரைப்பதை உணர்கிலன் -(அவர்களுக்கு) ஆறுதல்சொல்வதை அறியாமலும்; ஒழிப்பது ஓர்கிலன் -(அவர்களை) வராமல் தடுப்பதுபற்றிஆராயாமலும்; தன் மனையை நோக்கினான்- தன் இல்லத்தை நோக்கிச் சென்றான். பின்பற்றி வருவாரைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறி அகற்ற இயலாமல் இராமன் தன் மனைக்குச் சென்றான் என்பதாம். ‘உரைப்பதை’ என்பதற்கு அவர்கள்புலம்பிக் கூறுவதை உணராதவனாய் என உரைப்பினும் அமையும். 181 |