1787.நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான்.

     நல் நெடு நளிர் முடி சூட - சிறந்த பெரிய பெருமை  உடைய
மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும்
பவனி போனவன்
- நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால்  ஆகிய
பெரிய தேரின்மீது  உலாச் சென்ற இராமன்;  மீண்டும் - திரும்பவும்; அப்
பொன் நெடுந் தெருவிடை
- பொலிவுபெற்ற அதே பெருவீதியில்;  துன்
நெடுஞ் சீரையும்  சுற்றி
- நெருங்கிய  பெரிய மரவுரியைச் சுற்றிக்
கொண்டு;  போதல் மேயினான் - போவதைப் பொருந்தினான்.

     தேரொடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு
சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும்
அதிகமாக்கினார் கம்பர்.‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்,
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற
கண்ணகி நிலையை ஒப்பிடுக.                                    182