இராமனை வீதியில் கண்டார் உற்ற வருத்தம்  

1788.அந்தணர், அருந் தவர், அவனி காவலர்,
நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்
சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்
வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர்.*

     அருந்தணர்-; அருந்தவர்- அரிய முணிவர்கள்; அவனிகாவலர்-
பூமிஅரசர்கள்;  நந்தல் இல் நகருளார் -கெடுதலில்லாத அயோத்தி
நகரில்  உள்ளவர்கள்; நாட்டுளார்கள் -கோசல நாட்டில் உள்ளவர்கள்;
தம் சிந்தை புகல்வது  என்?- மனம்பட்டதுன்பத்தைச் சொல்வது
எவ்வாறு;  மேல்வரும் உறுதி வேண்டலர் -(இராமன்காடு
செல்வதால்தங்களுக்கு) எதிர்காலத்தில் வரும் நன்மையும்
விரும்பாதவர்களாய்; தேவர்உள்ளமும் வெந்தனர் -(இராமனது மரவுரிக்
கோலம் கண்டும்)  தேவர்களும்  உள்ளம் வெந்துபோனார்கள்.

     தேவர்களுக்காகவே இராமன் மரவுரி தரித்துக் காடு சென்றானாகத்
தேவர்களே அக்கோலம் கண்டு தரியாதவர்களாக மனம் வெந்தனர் ஆயின்
மற்றவர் நிலையைச்சொல்வது எவ்வாறு? என்றாராம்.                183