1791. ‘முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
“உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என,
எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து,
அழுவதே? அழகிது இவ் அன்பு!’ என்றார் - சிலர்.

     சிலர் -;  பிறந்து  உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் -
மூத்தவனாகப்  பிறந்துஉலகம்  முழுவதையும்  தனக்கு  உடைமையாகப்
பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற்
யான்’ என எழுவதே?
- புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று
சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? - அவன்
புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா;
இருந்து  அழுவதே?-;  இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில்
வைத்த அன்பு அழகாயிருந்தது;’  என்றார்-.

     ‘எழுவதே? எழுதல் கண்டு  இருப்பதே? இருந்து  அழுவதே?’  இவ்
வடியில் ஒரு சொல்லை இன்னொருசொல் பற்றித் தொடர்ந்து வந்துள்ள
அழகு காண்க. ‘ஒற்றைச் சர மாலை யணி’  என இதனைக்கூறுவர்;
வடமொழியில்‘ஏகாவளி எனப்பெறும்.                           186