1792. | வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை ‘நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை, நிலம் கடிந்தாளொடு நிகர்’ என்றார் - சிலர். |
சிலர் -; வலம் கடிந்து - வலிமை போக்கி; ஏழையர் ஆய மன்னரை -(ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப் பார்த்து; ‘நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள் - நன்மை நீக்கி, தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள்(அப்படிச் செய்தால்); நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை- உம்முடையஅரசர் குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய பரசுராமனது பலிமையை வெற்றி கொண்டமேகவண்ண இராமனை; நிலம் கடிந்தானொடு - அரசாட்சி நிலவுரிமையிலிருந்து நீக்கியகைகேயியோடு; நிகர்’ - நீங்களும் ஒப்பாவீர்;’ என்றார் -. அரசர்களை நோக்கி; ‘அறத்துக்குப் போராடுங்கள்; இராமனை மீண்டும் ஆட்சியில்அமர்த்துங்கள்; இல்லையேல் நீங்களும் கைகேயிக்குச் சமானமாவீர்கள் என்றனர் சிலர்என்க. 187 |