1793.‘திரு அரை சுற்றிய
     சீரை ஆடையன்,
பொரு அருந் துயரினன்,
     தொடர்ந்து போகின்றான்.
இருவரைப் பயந்தவள்
     ஈன்ற கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ்
     ஊர் உறவு?’ என்றார் - சிலர்

     சிலர் -;  ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய
இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்;  பொரு
அருந்துயரினன்
- ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு;  தொடர்ந்து
போகின்றான்
- (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற;
இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு
பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்;  ஈன்ற - பெற்றெடுத்த;
கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன்
மட்டும்தானா?; இவற்கு  இவ்ஊர் உறவு’ - இராமனுக்கு  இந்தஊரில்
உறவாக இருப்பவர்  (வேறு யாரும் இலரோ);’  என்றார் -.

     தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டு்மே பின்
தொடர்ந்து,  செல்வது  கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய
பேச்சுஇது.                                                  188