1796. | ‘நிறை மக உடையவர், நெறி செல் ஐம்பொறி குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர் முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமனம் இரும்பு’ என்றார் - சிலர். |
சிலர்-; ‘நிறை மக உடையவர் - பல பிள்ளைகளை உடையவர்கள்; நெறி செல்ஐம்பொறி குறை - மனத்தின் வழியில் செல்கின்ற ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற; மக - பிள்ளை; குறையினும் - அழிந்தாலும்; உயிர் கொடுப்பர் - தங்கள் உயிரைப் போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்); முறைமகன் வனம் புக- அரச உரிமைக்கு முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல; மொழியைக் காக்கின்ற இறைமகன் - வாய்மையைக் காத்து வரம் கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்; திருமனம்இரும்பு’ - அழகிய மனம் இரும்பாகும்;’ என்றார் - குறை மக - ஊமை, செவிடு, குருடு முதலிய குறை உடைய பிள்ளை. ‘ஆம்’ உரையசை. 191 |