1797. வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,
பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;
ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்
தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார்.

     வாங்கிய மருங்குலை - உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை;
வருத்தும்கொங்கையர் - தமது  பாரத்தால் வருத்துகின்ற தனங்களை
உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர் - மலர்
பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் - அழுத குரல்
உடையதாய்;  இணைந்த காந்தனின் - இரட்டையானகாந்தள் மலர்போல்;
செங்கை - சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கியஉளார் - தம்
தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர்.

     மகளிர் தம் தலைமீது கைவைத்து அழுதவண்ணம் உளர் என்றார்.
‘கை தலையின்மீது உளார் பூங்கொடி ஒதுங்குவது போல் ஒதுங்கினர்’ என
முடிப்பினும்அமையும்.                                         192