1802.காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்,
தே மரு நறுங் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன - தவள மாடமே.

     காமரம் கனிந்து  என - காமரம் என்னும் பண் முற்றிப்
பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை
உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு
சேர்தலால்
- வீதியை அடைந்தபடியால்;  தவளமாடம் - வெண்ணிற
மாளிகைகள்;  தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன-
தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப்
பிரிந்த தாமரைமலர்போல் ஆயின.

     காமரம்  என்பது  பண் நிரம்பினாற் போன்ற பேச்சு.  மகளிர்
போனபடியால் வெறுமைஅடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய
தாமரைபோல் என்றார்.  தவளம் - வெண்மை.“திருப்புறக் கொடுத்த
செம்பொன் தாமரை  போன்று கோயில்,  புரிக்குழல மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த அன்றே”  என்ற  சிந்தாமணி (560) இங்கு ஒப்பு
நோக்கற்குரியது.  ‘ஏ’ காரம்ஈற்றசை.                              197