| 1806. | ஒளி  துறந்தன முகம், உயிர் துறந்தென;  துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்  தளி துறந்தன பரி; தான யானையும்  களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே.  |  
      உயிர்  துறந்தென - உயிர் போனார் போல;  முகம் -   எல்லோருடையமுகமும்;  ஒளி துறந்தன - ஒளி மழுங்கின;  முகில்  தொகையும் - மேகக்கூட்டமும்;  துளி துறந்தன - மழைத் துளி  துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன-   தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன;  தானயானையும் - மதப்  பெருக்கையுடைய  யானைகளும்;  மலர்க் கள் உண் வண்டின் - மலரில்  தேன் உண்ணும்  வண்டைப் போல;  களி துறந்தன -  களித்தலைக் கை  விட்டன.      தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே  வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும்  துயரத்தால்  மலர்களில் தேன் இல்லையாயிற்று.                               201  |