1806.ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
தளி துறந்தன பரி; தான யானையும்
களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே.

     உயிர்  துறந்தென - உயிர் போனார் போல;  முகம் -
எல்லோருடையமுகமும்;  ஒளி துறந்தன - ஒளி மழுங்கின;  முகில்
தொகையும் -
மேகக்கூட்டமும்;  துளி துறந்தன - மழைத் துளி
துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன-
தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன;  தானயானையும் - மதப்
பெருக்கையுடைய  யானைகளும்;  மலர்க் கள் உண் வண்டின் - மலரில்
தேன் உண்ணும்  வண்டைப் போல;  களி துறந்தன -  களித்தலைக் கை
விட்டன.

     தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே
வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும்  துயரத்தால்
மலர்களில் தேன் இல்லையாயிற்று.                               201