1808.தார் ஒலி நீத்தன, புரவி; தண்ணுமை
வார் ஒலி நீத்தன, மழையின் விம்முறும்;
தேர் ஒலி நீத்தன, தெருவும் - தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே.

     புரவி - குதிரைகள்;  தார் ஒலி நீத்தன - கழுத்திற் கட்டிய
கிண்கிணிமாலையின் ஓசையைக் கையிட்டன; தண்ணுமை - மத்தளம்; வார்
ஒலி நீத்தன -
வாரை  இீழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக்
கைவிட்டன;  தெருவும் - வீதிகளும்;  தெண்திரை  நீர் ஒலி நீத்தன
நீத்தம் போல -
தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல;
மழையின் - மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன - ஒலிக்கின்ற
தேர்களின் ஒலியை இழந்தன.

     குதிரை ஒட்டுவாரில்லை,  மத்தளம் அடிப்பார் இலர்,  தெருவில்
தேர்கள் ஓடவில்லைஎன்றார்.  அலை ஒழிந்த  கடல் தேரோசை இழந்த
தெருவுக்கு  உவமை ஆயிற்று.  ‘ஏ’ஈற்றசை.                       203