1810. | தெள் ஒளிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே; புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே; கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே.* |
தென் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை - தெளிந்த ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது ஒலிக்கின்ற அழகிய வீடுகள் (இப்போது); நள் ஒலித்தில -நள்ளென்ற ஓசை உடையவாய் ஒலிக்கவில்லை; நளிர் - செறிந்த; கலையும் அன்ன- மேகலை அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் - நீரில்; புள் ஒலித்தில -பறவைகள் ஒலிக்கவில்லை; பொழிலும் - சோலைகளும்; அன்ன - அதுபோலப் புள் ஒலிக்கா ஆயின; மலர் - பூக்களில்; கள் - வண்டுகள் ஒலித்தில; களிறும்- யானைகளும் (மதநீர் படாமையால்); அன்ன - அதுபோல வண்டுகள் ஒலிக்காவாயின. சிலம்பு, மேகலை அணிவாரும் இயங்குவாரும் இல்லை. பறவைகள் அடங்கின. வண்டுகளும்ஓடுங்கின என்றார். ‘ஏ’ காரங்கள் அசை. 205 |