1812.ஆடினர் அழுதனர்; அழுத ஏழ் இசை
பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
டினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே.

     குழாம் குழாம் கொடு-கூட்டம் கூட்டமாகத் திரண்டு; ஆடினர்-
நடனம்ஆடிக் கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; அமுத ஏழ் இசை-
அமுதம் போன்ற இனியஏழு சுரங்களை;பாடினர் அமுதனர்-
பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்;பரிந்தகோதையர் ஊடினர்-
அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-;
உயிரின் அன்பரைக் கூடினர்-
உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய
மகளிர்; அழுதனர்-.

     வெவ்வேறு இன்பமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்
அத்தொழிலைக் கைவிட்டு அழுதனர்என்பதாம். ‘ஏ’ ஈற்றசை.       207