1813. | நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல் பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு ட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும் ட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. |
களிறு- யானைகள்; நீரின்- நீரில்; கை நீட்டில-துதிக்கையை நீட்டவில்லை; புரவிகள்- குதிரைகள்; வாய்- வாயில்; புதல்- புல்; பூட்டில- பூட்டப்பெறவில்லை;புள்ளும்- பறவைகளும்; பார்ப்பினுக்கு- தம் குஞ்சுகளுக்கு;இரை ஊட்டில- இரை உண்பிக்கவில்லை;கறவை- பசுக்கள்;புனிற்று- ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும்- தாம்பெற்ற கன்றையும்;ஊட்டில-பால் ஊட்ட விடவில்லை;நைந்து உருகிச் சோர்ந்த- தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன. யானைகள் நீர்உண்ணவில்லை என்பதை துதிக்கையைப் புனலின் நீட்டில என்றார். புதல்-புல். புல், கொள் நிறைந்த பையினைக் குதிரை வாயில் மாட்டித் தின்னச் செய்வது வழக்கம்.ஆதலின், ‘புதல் பூட்டில’ என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 208 |