1813.நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்
பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு
ட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்
ட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே.

     களிறு- யானைகள்; நீரின்- நீரில்; கை நீட்டில-துதிக்கையை
நீட்டவில்லை; புரவிகள்- குதிரைகள்; வாய்- வாயில்; புதல்- புல்;
பூட்டில- பூட்டப்பெறவில்லை;புள்ளும்- பறவைகளும்; பார்ப்பினுக்கு-
தம் குஞ்சுகளுக்கு;இரை ஊட்டில- இரை உண்பிக்கவில்லை;கறவை-
பசுக்கள்;புனிற்று- ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும்- தாம்பெற்ற
கன்றையும்;ஊட்டில-பால் ஊட்ட விடவில்லை;நைந்து உருகிச்
சோர்ந்த-
தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன.

     யானைகள் நீர்உண்ணவில்லை என்பதை துதிக்கையைப் புனலின்
நீட்டில என்றார். புதல்-புல். புல், கொள் நிறைந்த பையினைக் குதிரை
வாயில் மாட்டித் தின்னச் செய்வது வழக்கம்.ஆதலின், ‘புதல் பூட்டில’
என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை.                                  208