இராமன் சீதை இருக்குமிடம் சேறலும் அவள் திடுக்குறலும் 1818. | உயங்கி அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம் மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர, இயங்கு பல் உயிர்க்கு ஒர் உயிர் என நின்ற இராமன் தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். |
அந்நகர் - அந்த அயோத்தி நகரம்; உயங்கி - வாடி; உலைவுற- வருந்த; ஒருங்கு - ஒருசேர; உழைச் சுற்றம் - ஏவல் செய்வோர்; மயங்கிஏங்கினர் - அறிவு கலங்கி அழுது; வயின் வயின்- அங்கங்கே; வரம்பிலர்தொடர - அநேகர் பின்பற்றி வர; இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்றஇராமன் - சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும் உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற இராமன்; தயங்கு - விளங்குகின்ற; பூண் முலைச் சானகி -அணிகலன் அணிந்த தனங்களை உடைய சீதை; இருந்துழிச் சார்ந்தான் - இருந்த அரண்மனையை அடைந்தான். உழைச் சுற்றம் அருகிருந்து வேலை செய்வோர். ‘உயிர்க்கு உயில் என நின்ற இராமன்’என்பதனைத் திருமாலாகிய பரம்பொருள் தத்துவத்தில் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும்தன்மையை நோக்கித் கூறியதாகவும் கொள்ளலாம். 213 |