1819. | அழுது, தாயரோடு அருந் தவர், அந்தணர், அரசர், புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும, பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா, எழுது பாவை அன்னாள், மனத் துணுகமொடு எழுந்தாள். |
அந்தணர்- வேதியர்; அருந்தவர் -அரிய முனிவர்; அரசர் -; (ஆகிய அனைவரும்) அழுது -; புழுதி ஆடிய மெய்யினர்- புழுதி படிந்த உடம்புஉடையவராய்; புடை வந்து பொரும - பக்கத்தில்வந்து விம்மியழ; பழுது சீரையின் உடையினன் -அழகற்ற மரவுரி உடை உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா- பார்த்து; எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப்பெற்ற பாவையை ஒத்த சீதை; துணுக்கமொடு - மனத்தில்வெருவுதலுடனே; எழுந்தாள் -. இதுகாறும் காணாததும் எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள் ஆதலின, சீதைக்குத்திடுக்கீடு நிகழ்ந்தது. 214 |