சீதை இராமனை வினாவுதல்   | 1820. | எழுந்த  நங்கையை, மாமியர்      தழுவினர்; ஏங்கிப்  பொழிந்த உண் கண் நீர்ப்       புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,  அழிந்த சிந்தையள் அன்னம்,       ‘ஈது இன்னது’ என்று அறியாள்;  வழிந்த நீர் நெடுங் கண்ணினள்,        வள்ளலை நோக்கி, |  
      எழுந்த நங்கையை - (கணவனை நோக்கி) எழுந்த சீதையை;  மாமியர் -;  தழுவினர் - தழுவிக்கொண்டு;  ஏங்கி - அவலித்து;  பொழிந்த உண்கண்  நீர்ப்புதுப்புனல் ஆட்டி - சிந்திய மையுண்ட  கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி;  புலம்ப - வருந்த;  அழிந்த சிந்தையள் அன்னம் - அதனால்கெட்டழிந்த  மனம்  உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் - இதற்குக்காரணம்  இன்னது  என்று  அறியாதவளாய்;  வழிந்த நீர் நெடுங் கண்ணினள் -  வழிகின்ற நீரினை  உடைய நீண்ட கண்களோடு;  வள்ளலை நோக்கி -   இராமனைப் பார்த்து,      இதுகாறும் அழுகையை  அறியாதவர் அழுத கண்ணீராதலின்  ‘புதுப்புனல்’ என்றார்.  இது குளகச்செய்யுள்.                       215  |