1824. | ‘துறந்து போம்’ எனச் சொற்ற சொல் தேறுமோ - உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஓரீஇ, அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? |
(நாமும் உடன் அவதரிக்காவிட்டால்) ‘அறம் திறம்பும்’ என்று - தருமம் நிலைகெடுமே என்று கருதி; உறைந்த பாற்கடல் சேக்கை தாம்- வசித்த பாற்கடலில் உள்ளஆதிசேடனாகிய படுக்கையை; உடன் ஓரீஇ - ஒன்றாக விட்டு நீங்கி; ஐயன்-திருமால்; அயோத்தியில் பிறந்தபின்பும் - அயோத்தியில் அவதரித்த பிறகும்; பிரியலள் ஆயினாள் - அவனைப் பிரியாது உடன் உறைய வந்தவள் ஆகிய சீதை; துறந்துபோம் எனச் சொற்ற சொல் - தன்னைப் பிரிந்து விட்டுப் போவேன்’ எனப் பொருள்படுமாறுஅவன் சொன்ன சொல் கேட்டு; தேறுமோ? - ஆற்றவளோ? ஐயன் மட்டும் அவதாரம் செய்தால் ‘அறம் திறம்பும்’ என்று கருதி, அதற்காகவே தானும்உடன் அவதரித்தவள், இப்போது பிரிவதைத் தாங்க இசைவளோ? 219 |