1828.அண்ணல், அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணுகின்றனன், என் செயற்பாற்று?’ எனா,

     அண்ணல் - இராமன்;  அன்ன சொல் கேட்டனன் - அவள்
சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன்
மேலும;  உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில்
தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்-
உடன்படாதவனாய்;  ‘என்செயற்பாற்று’ எனா - செய்தற்குத்தகுதியானது
யாது  என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான்.

     ‘அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக்
கைவிட  உடன்படாது’ என்றும்பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும்
ஒன்றாக இருப்பது  உணர்ந்து  சிந்திப்பான் ஆயினன்இராமன்.       223