சீதையைக் கண்டோர் வருத்தம் 1830. | ஏழைதன் செயல் கண்டவர் யாவரும் வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்; வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ? - ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! |
ஏழை தன் செயல் - சீதையின் மரவுரி உடுத்த செயலைக்; கண்டவர் யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் - இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் - இறக்கவில்லை; வாழும் நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும் இருக்குமானால் அவர்கள்; மாள்வரோ? - இறப்பார்களோ; ஊழி பேர்கினும் - பிரளயமே நேரிட்டாலும்; உய்குநர் உய்வர் - பிழைக்கும் விதி உள்ளவர் பிழைப்பர். மிக்க சோகமும் உயிர்த்துடிப்பும் நிகழ்ந்தது கண்டவர் வீழ்ந்து இறக்காமைக்குக்காரணம் அவர்களுக்கு ஆயுள் உள்ளமையே அன்றி வேறன்று என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. ‘ஏ’காரம் ஈற்றசை. 225 |