1831. | தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர், ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர் தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான் தூய தையலை நோக்கினன், சொல்லுவான்; |
தாயர் -; தவ்வையர் - தமக்கைமார்கள்; தன்துணைச் சேடியர் - சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர்- தோழியர்கூட்டமாக உள்ள அன்பினை உடையவர்கள்; என்று இவர் -; தீயில் மூழ்கினர் ஒத்தனர் -நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப் போன்று ஆனார்கள்; செங்கணான் - சிவந்தகண்களை உடைய இராமன்; தூய தையலை நோக்கினன் சொல்லுவான் - கற்பிற் சிறந்தசீதையைப் பார்த்துச் சொல்லுகின்றான்; ஆடவர்க்குச் செங்கண் கூறல் வழக்கு. நோக்கினன்-முற்றெச்சம். 226 |