1833. | கொற்றவன் அது கூறலும், கோகிலம் செற்றது அன்ன குதலையள் சீறுவாள், ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே’ என்- துறந்தபின், இன்பம் கொலாம்?’ என்றாள். |
கொற்றவன் - அரசனாகிய இராமன்; அது கூறலும் - அச்சொல் சொல்லுதலும்; கோகிலம் செற்றது அன்ன குதலையள் - குயில் கோபம் கொண்டது போன்றகுதலைப் பேச்சினை உடைய சீதை; சீறுவாள் - கோபித்து; ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? - உம்மை அடைந்து நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ; என் துறந்த பின் இன்பம் கொல்’ - என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு காட்டில் உங்களுக்கு இன்பமே உண்டாகும் போலும்;’ என்றாள் -. குதலை - பொருள் தெரிந்து சொல் தெரியாதது. ‘ஆம்’ உரையசை. ‘கொல்’ ஐயம். 228 |