நகர மக்கள் இராமனைத் தொடர்தல் 1836. | ஆரும் பின்னர் அமுது அவலித்திலர்; சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்; ‘வீரன்முன் வனம் மேவிதும் யாம்’ எனா, போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். |
ஆரும் - எவரும்; பின்னர் - பிறகு; அழுது அவலித்திலர் - அழுது துன்பம் உறவில்லை; சோரும் சிந்தையர் - தளர்ந்த மனத்தோடு; யாவரும் சூழ்ந்தனர் - அனைவரும் ஆலோசித்து; ‘வீரன்முன் - இராமனுக்கு முன்னே; யாம் வனம் மேவுதும்’ - நாம் காட்டிற்குச் செல்வோம்; எனா -என்று; போர் என்று ஒல்லொலி கைம்மிக - ‘போர்’ என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க;போயினார் - புறப்பட்டுச் சென்றார்கள். ‘போர்’ என்பது ஒலிக்குறிப்பு. ’போர்’ போல ஒலி மிகுதியாக எனலும் ஆம். இராமனுக்குமுன்பே காடு செல்வதென முடிவு செய்தமையால் அழுதலும் அவலித்தலும் இல்லை. 231 |