சூரியன் மறைதல் 1842. | மீன் பொலிதர, வெயில் ஒதுங்க, மேதியோடு ஆன் புக, கதிரவன் அத்தம் புக்கனன் - ‘கான் புகக் காண்கிலேன்’ என்று, கலலதர் தான் புக முடுகினன் என்னும் தன்மையான், |
கதிரவன் - சூரியன்; ‘கான்புகக காண்கிலேன்’ என்று - (இராமன்) காடுசெல்வதைக் காணச் சகியேன் என்கின்ற காரணத்தால்; கல்லதர் - கல்பொருந்தியகாட்டு வழியில்; தான்புக முடுகினன் - தானும் செல்லுதற்கு விரைந்தான்; என்னும்தன்மையான் - என்று சொலல்லும்படியானவனாக; மீன் பொலிதர - நட்சத்திரங்கள்விளங்க; வெயில் ஒதுங்க - வெயில் ஒளி விலக; மேதியோடு ஆன்புக - மேயச்சென்ற எருமையோடு பசுக்கள் இல்லம் சேர; அத்தம் புக்கனன் - மாலை மறை மலையைச்(அத்தமன கிரி) சேர்ந்தான். சூரியன் மறைதலை இராமன் கான்புகச் சகியாமல் தானும் கல்லதர் புகவிரைந்தான் என்றதுதற்குறிப்பேற்ற அணி, மாலைக் காலத்தே விண்மீன்கள் தோன்றல்; வெயில் மறைதல்;மந்தையிலிருந்து ஆவினங்கள் வீடு புகுதல் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் கவிஞர் தாம் ஒரு குறிப்பேற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்றமாகிறது. 3 |