முனிவர்களோடு இராமன் தங்கல்  

1846.திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று, ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்;
இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே.

     இராமன் -;  திருநகர்க்கு - அயோத்திக்கு;  ஓசனை இரண்டு
விரைவின் சென்று -
இரண்டு யோசனை தூரம் வேகமாகச் சென்று; ஒரு
விரைசெறி சோலையை -
மணம்பொருந்திய ஒரு சோலையை;
எய்தினான் - அடைந்து;  இரதன் நின்று  இழிந்து -தேரிலிருந்து
இறங்கி;  பின் - பிறகு;  இன்புறும் - தன் வரவால் மகிழ்ச்சிஅடைகின்ற;
உரை செறி முனிவரோடு - மந்திரவுரையால் நிறைந்த முனிவர்களோடு;
உறையும் காலை - தங்கியிருக்கும் நேரத்தில்.

     உரை செறி-புகழ் மிகுந்த என்றும் ஆம். அடுத்த பாட்டில்முடியும்.  7